கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிக்கின்றன. நன்மைகள் அதிகம் எதிர் பார்க்கலாம். திருமண முயற்சி. குழந்தை பாக்யம். சொந்த வீடு அமையும்.
உத்தியோக மேன்மை கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. பொருளாதாரம் உயரும். வியாபாரிகளுக்கு மிகவும் உயர்வான நேரம். புதிய துறைகளில் முதலீடு செய்து வெற்றி பெறலாம்.
கலைத்துறையில் சினிமா தயாரிப்புகள் நல்ல லாபம் தரும். மனக்கசப்பு இனி இராது. பாட்டு, சங்கீதம் அபிவிருத்தி அடையும்.
அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் கூடும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். மறைமுக வருமானம் அதிகரிக்கும். தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பெண்களுக்கு ஆரோக்யத்தில் நல்ல அபிவிருத்தி காணலாம். அலுவலகத்தில் பதவி உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டுதலும் கிடைக்கும். பழைய கடன்கள் தீர்வதுடன் பொருளாதார நிலையில் சீர்திருத்தம் ஏற்படும்.
வழிபாடு : முருகன் கோவில்களுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வரவும்.
நவ திருப்பதிகளுக்கும் சென்று வரலாம்.
No comments:
Post a Comment