அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு. குரு பெயர்ச்சிக்குப்பின் படிப்படியாக துன்பங்கள் குறையும். குருவின் சுபப் பார்வை நன்மை அளிக்கும்.
வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிகாரியின் கருணைப் பார்வை கிடைப்பதோடு அலுவலகப் பிரச்னைகளும் தீரும்.
தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்க விற்பனையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும். புதிய திட்டங்கள் முயற்சிகளை சில காலம் ஒத்தி வைப்பது நல்லது.
கலைத்துறையினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளிநாடு சென்று நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மன அமைதியும் ஏற்படும்.
அரசியலில் மேலிடத் தலைவர்களின் மனோபாவம் மாறுவதால் அனுசரணை யாகப் பேசுவார்கள். இது நல்ல திருப்பமாக அமையும். தேர்தலில் வெற்றி அடையலாம்.
பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் ஏற்பட்ட சிரமங்கள் பெருமளவில் குறையும். தடங்கல், ஏமாற்றம் இனி இருக்காது. பொருளாதாரம் கட்டுக்கடங்கும். ஆரோக்யம் இனி சீராகும்.
வழிபாடு : தன்வந்த்ரி பகவானுக்கு திருமஞ்சனம் செய்வது நல்லது. ராமானுஜரை தரிசிக்கவும். ஆதித்ய ஹ்ருதயம், மிருத்துஞ்ய மந்திர பாராயணம் நன்மை தரும்.