Thursday, April 11, 2013

மீனம்



அஷ்டம ஸ்தானத்தில்  சனி, ராகு.  குரு பெயர்ச்சிக்குப்பின் படிப்படியாக துன்பங்கள் குறையும்.  குருவின் சுபப் பார்வை  நன்மை  அளிக்கும்.


வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிகாரியின் கருணைப் பார்வை கிடைப்பதோடு அலுவலகப்  பிரச்னைகளும்  தீரும்.

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்க விற்பனையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும்.  புதிய திட்டங்கள் முயற்சிகளை சில காலம்  ஒத்தி வைப்பது நல்லது.

கலைத்துறையினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  சிலருக்கு  வெளிநாடு சென்று  நடிக்கும்  வாய்ப்பு  கிடைக்கும்.   மன அமைதியும்  ஏற்படும்.

அரசியலில் மேலிடத் தலைவர்களின் மனோபாவம்  மாறுவதால்  அனுசரணை யாகப் பேசுவார்கள்.  இது நல்ல திருப்பமாக அமையும்.  தேர்தலில்   வெற்றி அடையலாம்.

பெண்களுக்கு  குடும்ப  நிர்வாகத்தில் ஏற்பட்ட சிரமங்கள் பெருமளவில் குறையும்.    தடங்கல், ஏமாற்றம்  இனி இருக்காது.  பொருளாதாரம் கட்டுக்கடங்கும்.  ஆரோக்யம்  இனி  சீராகும்.

வழிபாடு : தன்வந்த்ரி  பகவானுக்கு  திருமஞ்சனம்  செய்வது  நல்லது.                            ராமானுஜரை தரிசிக்கவும்.  ஆதித்ய ஹ்ருதயம்,  மிருத்துஞ்ய மந்திர                    பாராயணம் நன்மை தரும்.  

கும்பம்





வருமானம்  திருப்திகரமாக  இருக்கும்.  சுபச் செலவுகள் எதிர்பாராத செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவற்றில்  பணம்  செலவாகும்.  மகிழ்ச்சி தரும்  செய்தி  கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை  ஏற்படாது.   பெண் குழந்தைகளைப் பற்றிய  கவலைகள் ஏற்படும்.  

வேலை பார்ப்பவர்களுக்கு  பொறுப்புகள் கூடும். மேல் அதிகாரிகளுடன் விட்டுக்  கொடுத்து  சுமூகமாக நடந்து கொள்ளுங்கள். உணர்ச்சிவசப் படுவதைத்  தவிர்க்கவும்.  

வேலை  தேடும்  இளைஞர்களுக்கு  சற்று சிரமத்திற்குப்பின்  வேலை கிடைக்கும்.
தொழில்,  வியாபாரம் ஆகியவற்றில் போட்டிகள் அதிகரிக்கும். நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்பு குறையும்.  வெளிநாடு  ஆர்டர்கள் கிடைப்பதில்  சிரமம் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள்  அளவோடு  கிடைக்கும்.  

அரசியலில் உள்ளவர்களுக்கு  கிரகநிலைகள்  சாதகமாக  உள்ளதால்  நன்மைகள் ஏற்படும்.

பெண்மணிகளுக்கு குரு பகவானின் பார்வை சுமாராகவே  உள்ளது. திருமண வயதிலுள்ளவர்களுக்கு  சற்று  தாமதமாகும். 
அவசியமற்ற  செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வழிபாடு : காமாட்சி, மீனாட்சி, மாரியம்மன்  ஆகிய  அம்மன்  தரிசனம்  
                       பயன் தரும்.

மகரம்





வருமானம்  திருப்திகரமாக  இருக்கும்.  சுபச் செலவுகள் எதிர்பாராத செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவற்றில்  பணம்  செலவாகும்.  மகிழ்ச்சி தரும்  செய்தி  கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை  ஏற்படாது.   பெண் குழந்தைகளைப் பற்றிய  கவலைகள் ஏற்படும்.  

வேலை பார்ப்பவர்களுக்கு  பொறுப்புகள் கூடும். மேல் அதிகாரிகளுடன் விட்டுக்  கொடுத்து  சுமூகமாக நடந்து கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படுவதைத்  தவிர்க்கவும்.   வேலை  தேடும்  இளைஞர்களுக்கு  சற்று சிரமத்திற்குப்பின்  வேலை கிடைக்கும்.
தொழில்,  வியாபாரம் ஆகியவற்றில் போட்டிகள் அதிகரிக்கும். நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்பு குறையும்.  வெளிநாடு  ஆர்டர்கள் கிடைப்பதில்  சிரமம் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள்  அளவோடு  கிடைக்கும்.  

அரசியலில் உள்ளவர்களுக்கு  கிரகநிலைகள்  சாதகமாக  உள்ளதால்  நன்மைகள் ஏற்படும்.

பெண்மணிகளுக்கு குரு பகவானின் பார்வை சுமாராகவே  உள்ளது. திருமண வயதிலுள்ளவர்களுக்கு  சற்று  தாமதமாகும்.  அவசியமற்ற  செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வழிபாடு : காமாட்சி, மீனாட்சி, மாரியம்மன்  ஆகிய  அம்மன்  தரிசனம் 
                      பயன்  தரும்.

தனுசு




கிரக நிலைகள்  இந்த விஜய வருடத்தில் அனுகூலமாகவே  உள்ளன.  நல்ல  பலன்களை எதிர்பார்க்கலாம்.  முதலீட்டுக்குத்  தகுந்த  லாபம்  கிடைக்கும்.  மிகுந்த  பலன் அடையும் காலமாகும்.

வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை,  நிறுவன மாற்றம், பொருளாதார உயர்வு  ஆகியவை  கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு மிக உயர்வான காலம்.  வருமானம் உயரும்.  பொருள்களுக்கு கிராக்கி  ஏற்பட்டு லாபம் பெருகும்.

கலைத்துறையினர் நல்ல வாய்ப்பினைப் பெற்று  பேரும் புகழும்  பெறலாம்.  இத்துறையில்  நிலையான ஓரிடம்  அமையும்.  வீடு, வாகனம்  கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு  குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டு மகிழ்ச்சி  ஏற்படும். அனைவரது ஒத்துழைப்பும்  கிடைக்கும். பொருளாதாரம்  இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். சேமிப்புக்கு  உகந்த காலம். குரு பலத்தால்  இளைஞர்கள், பெண் குழந்தைகளுக்கு  நல்லமுறையில் திருமணம் நடைபெறும்.

வழிபாடு :  மகாலட்சுமிக்கு  தீபம் ஏற்றி  வணங்குவதுடன் நன்றி                    சொல்லுங்கள்.

விருச்சிகம்




  ஏழரை சனி நடைபெறுகிறது. குரு பகவான் 8-ல் சஞ்சரிக்க உள்ளார்.  பொருள் விரயம்  ஏற்படும். வருமானம்  குறையும்.

வேலை பார்ப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து  நடந்து கொள்ள வேண்டும்.  

வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.  செய்து வரும் தொழிலிலேயே கவனம் செலுத்தவும். 

கலைத்துறையினர் கடின முயற்சியின் பேரிலேயே  அனுகூலங்களை எதிர்ப்பார்க்கலாம்.  சனி,  ராகு,  குரு ஆகிய  கிரகங்கள் பலன் தரும் நிலையில் சஞ்சரிக்கவில்லை. பிறந்த போது தசா புக்திகள், கிரகநிலைகள் நன்றாக இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். கோள்சார  நிலையாக  விருச்சிக ராசிக்கு சுமாரான காலமே.

பெண்மணிகள் செலவுகளை அதிகரிக்க வேண்டாம்.  வரவுக்கு  தகுந்த செலவு செய்யவும்.

வழிபாடு :   அருகில்  உள்ள ஆலயத்திற்கு  சென்று நெய் தீபம்  ஏற்றி மூன்று                      முறை  வலம்  வரவும்.  பெருமாள் கோவிலில்  தியானம்  செய்தால்  மனம் அமைதி பெறும்.

துலாம்




ஜென்ம சனி நடைபெறுகிறது.  திருக்கொள்ளிக்காடு,  திருநரையூர்  சென்று  சனி  பகவானை வழிபடவும். குருப்பெயர்ச்சிக்குப்பின் ( மே.28)  பொருளாதார நிலை சீராகும். உடல்நலத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவு உண்பது  நலம் பயக்கும். 

வேலைப் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு,  நிறுவன மாற்றம் ஏற்படும்.   தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கலைத்துறையினர்  உயர்வு  பெறுவார்கள்.  புதிய முதலீடுகள் பெற்றி பெறும். பொருளாதாரம் உயரும்.

அரசியல்வாதிகளுக்கு  இந்த ஓர் ஆண்டு நல்ல காலமே.  கூட்டணி  சரியாக அமைந்தால் வெற்றி நிச்சயம்.   இல்லையெனில் தோல்விதான் ஏற்படும்.

பெண்மணிளுக்கு பதவி உயர்வு, நிறுவன மாற்ற்ம்  பொருளாதாரத்தில் உயர்வு ஏற்பட்டு  குடும்ப சூழ்நிலை நன்றாக  இருக்கும்.

வழிபாடு :  சிவபெருமான் சன்னதியில் நெய் தீபம்  ஏற்றுவது.  சனிக்கிழமை    களில்   கருவறையில் உள்ள பெருமாளுக்கு நெய்  தீபம் ஏற்றி  வழிபடுவது சிறப்பாகும்.

கன்னி




கடந்த ஆண்டு சோதனைகள் கசங்கிப் பிழிந்து விட்டன. விடிவு காலம் பிறந்து விட்டது. வரவும்  செலவும்  இந்த  ஆண்டு சமமாகவே இருக்கும்.

வேலை பார்ப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.  திறமைக்கு  அங்கீகாரம்  கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்து கொள்ளவும்.

வியாபாரிகளுக்கு செப்டம்பர் 9-ம் தேதிக்குப்பின் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில்  செய்வோருக்கு கருத்து வேறுபாடு  ஏற்பட்டு பின்  சமரசத்தில் முடியும்.

கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் அளவோடு முதலீடு  செய்வது  நன்மை  பயக்கும்.  ஆடம்பரச் செலவுகளில்  பணம்  விரயமாகும்.  கவனம்  தேவை.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக வருமானம் கிடைக்கும். பெண்களால் வீண்பழி  ஏற்படும்.  சற்று  ஜாக்கிரதையாக  இருக்க வேண்டும்.

பெண்மணிகளுக்கு வரவும் செலவும்  சமமே. முன்னேற்றம்  தடைபடாது.   மற்றவர்களுடன் பேசும்போது கவனம் தேவை. பொருளாதாரம்  இந்த ஆண்டு வ ரவுக்கும் செலவுக்கும்  சரியாக  இருக்கும்.  கடன் வாங்க நேரிடாது.

வழிபாடு: சுந்தர காண்டம் பாராயணம்.  ஸ்ரீவாஞ்சியம்  சென்று  எமதர்ம 
                    ராஜாவுக்கு  நெய் தீபம்  ஏற்றி தரிசித்து வரவும்.