அர்த்தாஷ்ட சனி, ராகு நல்லது இல்லை. வருமானத்தைவிட செலவுகள் அதிகரிக்கும். தவறான முடிவுகள் எடுக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. கவனம் அவசியம்.
உத்தியோகத்தில் இடமாற்றம், நிறுவன மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு மந்த நிலை மாறும். ஆனாலும் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினருக்கு தடைபட்ட வாய்ப்புகள் தேடிவரும்.வீண் அலைச்சலும் பண விரயமும் தவிர்க்க இயலாதது.
அரசியல்வாதிகளுக்கு அபிப்ராய பேதம் ஏற்படும். சில உதவிகள் கிடைப்பதால் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். நன்மை எதுவும் ஏற்பட சாத்தியக் கூறுகள் இல்லை. தொழிலில் வெற்றி தாமதமாகும்.
பெண்மணிகளுக்கு வருமானத்தைவிட செலவுகளே அதிகம். உழைப்பும் பொறுப்பும் கூடும். சிலருக்கு நிறுவன மாற்றம் ஏற்படும். சேமிப்பு என்பது கடினமாகும். திட்டமிட்ட செலவுகள் பயன்தரும்.
வழிபாடு : வினை தீர்க்கும் வினாயகரை வழிபடுவது . ஸ்ரீஸ்துதி, கனகதாரா ஸ்தோத்திரம் பாரயணம் செய்வது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி சேவிப்பது நன்மை தரும்.
No comments:
Post a Comment