அளவற்ற நன்மைகள் அளிக்கும் நிலையில் கிரக நிலைகள் உள்ளன. குரு லாப ஸ்தானத்திற்கு வருவதால் தங்கம், வெள்ளி ஆபரண சேர்க்கையோடு சொந்த வீடு வாங்கும் யோகமும் அமையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
வேலை பார்ப்பவர்களுக்கு உற்சாகம் ஏற்படும். நிறுவன மாற்றம், பதவி உயர்வு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதாரம் உயரும்.
வியாபாரிகள் வெளிநாடு சென்று வருவார்கள். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான ஓர் ஒப்பற்ற அதிசயத்தக்க காலநேரத்தை எடுத்துக் காட்டுகிறது. வருமானம் அதிகளவில் கிடைக்கும். திரைப்படம் மூலம் வசூல் அதிகரிப்பதோடு புகழும் கிடைக்கும்.
அரசியல்துறையினருக்குதொட்டதெல்லாம் பொன்னாகும் விஜய புத்தாண்டில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு மனதில் மகிழ்ச்சி, உடல் ஆரோக்யம் கூப நிகழ்ச்சிகள், உறவினர் களுடன் நல்ல நெருக்கம் ஏற்படும். அனைத்து கிரகங்களும் அனுகூலமாக இருப்பதால் பொருளாதார பிரச்னை என்பதே இருக்காது.
வழிபாடு : கோசாலைக்கு உதவி செய்வது. வியாழன் வெள்ளிக்
கிழமைகளில் தாயார், அம்மன் சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றவும்.
No comments:
Post a Comment