ஏழரை சனி நடைபெறுகிறது. குரு பகவான் 8-ல் சஞ்சரிக்க உள்ளார். பொருள் விரயம் ஏற்படும். வருமானம் குறையும்.
வேலை பார்ப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். செய்து வரும் தொழிலிலேயே கவனம் செலுத்தவும்.
கலைத்துறையினர் கடின முயற்சியின் பேரிலேயே அனுகூலங்களை எதிர்ப்பார்க்கலாம். சனி, ராகு, குரு ஆகிய கிரகங்கள் பலன் தரும் நிலையில் சஞ்சரிக்கவில்லை. பிறந்த போது தசா புக்திகள், கிரகநிலைகள் நன்றாக இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். கோள்சார நிலையாக விருச்சிக ராசிக்கு சுமாரான காலமே.
பெண்மணிகள் செலவுகளை அதிகரிக்க வேண்டாம். வரவுக்கு தகுந்த செலவு செய்யவும்.
வழிபாடு : அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று நெய் தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வரவும். பெருமாள் கோவிலில் தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.
No comments:
Post a Comment