Thursday, April 11, 2013

கன்னி




கடந்த ஆண்டு சோதனைகள் கசங்கிப் பிழிந்து விட்டன. விடிவு காலம் பிறந்து விட்டது. வரவும்  செலவும்  இந்த  ஆண்டு சமமாகவே இருக்கும்.

வேலை பார்ப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.  திறமைக்கு  அங்கீகாரம்  கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்து கொள்ளவும்.

வியாபாரிகளுக்கு செப்டம்பர் 9-ம் தேதிக்குப்பின் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில்  செய்வோருக்கு கருத்து வேறுபாடு  ஏற்பட்டு பின்  சமரசத்தில் முடியும்.

கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் அளவோடு முதலீடு  செய்வது  நன்மை  பயக்கும்.  ஆடம்பரச் செலவுகளில்  பணம்  விரயமாகும்.  கவனம்  தேவை.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக வருமானம் கிடைக்கும். பெண்களால் வீண்பழி  ஏற்படும்.  சற்று  ஜாக்கிரதையாக  இருக்க வேண்டும்.

பெண்மணிகளுக்கு வரவும் செலவும்  சமமே. முன்னேற்றம்  தடைபடாது.   மற்றவர்களுடன் பேசும்போது கவனம் தேவை. பொருளாதாரம்  இந்த ஆண்டு வ ரவுக்கும் செலவுக்கும்  சரியாக  இருக்கும்.  கடன் வாங்க நேரிடாது.

வழிபாடு: சுந்தர காண்டம் பாராயணம்.  ஸ்ரீவாஞ்சியம்  சென்று  எமதர்ம 
                    ராஜாவுக்கு  நெய் தீபம்  ஏற்றி தரிசித்து வரவும்.

No comments:

Post a Comment